ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

கிரேன் விழுந்து விபத்து

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதிதாக வாங்கப்பட்ட கிரேனை ஊழியர்கள் பரிசோதித்தனர். அப்போது எதிராபாராத விதமாக அந்த கிரேன் சரிந்து விழுந்தது. தகவலறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

10 பேர் பலி?

காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.கே. மீனா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். விபத்து குறித்து தகவலறிந்த குடும்பத்தினர் கப்பல் கட்டும் தளம் முன்பு குவிந்தனர். போலீசார் அனுமதி மறுத்ததால் உள்ளே இருக்கும் தங்களது குடும்பத்தினரின் நிலை குறித்து தெரியவில்லை என அவர்கள் கூறுகின்றனர். இதனிடையே கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here