கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பச்சன் குடும்பத்தில் கொரோனா

இந்தி பட உலக சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனும், நடிகருமான அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கடந்த 12 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து அமிதாப் பச்சன் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அபிஷேக் பச்சனின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. வைரஸ் அறிகுறிகள் சிறிய அளவில் இருந்ததால், இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இதனால் ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆகியோர் கடந்த சில நாட்களாக வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.

மூச்சுத்திணறல், சிகிச்சை

இந்நிலையில், திடீரென ஐஸ்வர்யாவுக்கும் அவரது மகளுக்கும் நள்ளிரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக நெருங்கிய உறவினர்கள் கூறியுள்ளனர். கொரோனாவின் தாக்கம் அதிகமானதால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமித்தாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆராதியாவும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு கவலை அடையச் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here