ஊரடங்கு காலத்தில் ஷூட்டிங் இல்லாமல் நடிகர், நடிகைகள் வீட்டியேலே இருக்கும் சூழலில், நயன்தாரா மட்டும் ‘உஜாலா’ விளம்பரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

முன்னணி நடிகை

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழும் இவர், கடந்த 2003 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “மனசினகாரே” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் முதன்முதலாக அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். தற்போது ‘அறம்’, ‘மூக்குத்தி அம்மன்’ போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘அண்ணாத்த’ படத்திலும் நயன்தாரா நடிக்கிறார்.

விளம்பரத்தில் நயன்தாரா

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நடிகர், நடிகைகள் வருவாய் இல்லாமல் வாடிப் போகினர். இந்த நிலையில், நடிகை நயன்தாரா வீட்டில் இருந்தபடியே ‘உஜாலா’ விளம்பரத்தில் நடித்துள்ளார். ஆடைகளுக்கான நறுமணம் வீசும் லிக்யூடு விளம்பரத்திற்காக பிரபல நிறுவனம் ஒன்றின் விளம்பரப்படத்தில் நயன்தாரா நடித்துள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், ஊரடங்கு காலத்தில் அனைவரும் வேலையின்றி வீட்டில் வெட்டியாக இருக்கும் சூழலில் நடிகை நயன்தாரா மட்டும் விளம்பரத்தின் மூலம் காசு சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார் என கிண்டலடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here