நடிகை சாய் பல்லவி பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் பட வாய்ப்பை தவறவிட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மணிரத்னம் எனும் குரு

தனது சினிமாவை இந்தியாவில் உள்ள அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையில் செய்தவர்தான் இயக்குநர் மணிரத்னம். அவரது படம் என்றால் அனைவருக்கும் முகத்தில் ஒரு சந்தோஷம் தெரியும். திரையரங்கிற்குள் செல்லும்போது ஒரு புதுவிதமான அனுபவம் கிடைக்கும். இன்று இருக்கும் முன்னணி இயக்குநர்களுக்கும், சினிமாவை கனவாக நினைத்து வரவிருக்கும் இயக்குநர்களுக்கும் மணிரத்னம் படங்கள் என்றால் அவ்வளவு பிடிக்கும். மணிரத்னம் பலருக்கும் இன்ஸ்பிரேஷன் ஆகவே இருந்து வருகிறார்.

மணிரத்னத்தின் திரைப்படங்கள் 

மணிரத்தினத்தின் படங்களை அதிகம் விரும்புவது காதலர்கள் தான். மணிரத்னம் தனது முதல் படைப்பினை கன்னட திரையுலகில் தான் ஆரம்பித்தார். இரண்டாவது படத்தை மலையாளத்தில் இயக்கினார். மூன்றாவது திரைப்படமாக பகல் நிலவு படத்தை தமிழில் இயக்கினார். இதுதான் அவருக்கு தமிழில் முதல் திரைப்படம். தான் இயக்கிய அனைத்து படங்களிலும் தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் மணிரத்னம். தற்போது உள்ள தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களான ரஜினி, கமலின் மெகா ஹிட் படமான தளபதி மற்றும் நாயகனை இயக்கியவர். இவர் கடைசியாக இயக்கிய ‘செக்க சிவந்த வானம்’ பல நடிகர்கள் இணைந்து நடித்த திரைப்படம். இன்றும் எத்தனை படங்கள் எடுத்தாலும் இவரின் படைப்பு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரசிகர்களை ரசிக்க செய்யும் என்பதே உண்மை. காதல், ரொமான்ஸ் என்றாலும் இவருக்கு நிகர் இவர் மட்டுமே.

வாய்ப்பை தவறவிட்ட தருணம் 

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி ராவ் நடித்த “காற்று வெளியிடை” திரைப்படம், கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி, சுமரான விமர்சனங்களை சந்தித்தது. இப்படம் கார்த்தியை விட அதிதி ராவிற்கு ஒரு நல்ல ஒப்பனிங்கை தமிழ் சினிமாவில் பெற்றுத்தந்தது. இப்படத்தில் தான் அவர் அறிமுகமானார். ஆனால் “காற்று வெளியிடை” படத்தில் முதலில் நடிக்க வேண்டியது நடிகை சாய் பல்லவி தானாம். மணிரத்னத்தின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கும் பல நடிகைகள் மத்தியில், ஒரு சில காரணங்களால் சாய் பல்லவியால் நடிக்க முடியாமல் போனது. இருப்பினும் சாய் பல்லவி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள ரசிகர்களில் மனதில் இடம்பிடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here