பிரபல நடிகை திரிஷாவை மிரட்டி டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ள மீரா மிதுனை திரிஷா ரசிகர்கள் சகட்டுமேனிக்கு திட்டி வருகின்றனர்.

சர்ச்சை நாயகி

நடிகை மீரா மிதுனுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் வைத்துள்ள பெயர் சர்ச்சை நாயகி. எதற்கு எடுத்தாலும் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதே மீரா மிதுனின் வேலை. தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்வது தான் இவரின் வாடிக்கை. இந்த நிலையில், தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகை திரிஷா, சமூக வலைத்தளத்தில் படு சுறுசுறுப்பாக இருந்து வந்தார். நேற்று தனது டுவிட்டரில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை திரிஷா பதிவிட்டார். இந்தப் புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. இதனிடையே தன்னுடைய தோற்றத்தை திரிஷா காப்பி அடித்துவிட்டார் என நடிகை மீரா மிதுன் குற்றம்சாட்டியுள்ளார்.

திரிஷாவை எச்சரித்த மீரா

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் மீரா மிதுன் கூறியிருப்பதாவது; “திரிஷா இதுதான் உங்களுக்கு கடைசி எச்சரிக்கை. அடுத்தமுறை உங்கள் புகைப்படங்களை என்னை போலவே முடி மற்றும் என்னை போல மார்ப்பிங் செய்து வெளியிடாதீர்கள். அப்படி செய்தால் உங்கள் மீது  சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். நீங்கள் கொஞ்சம் வளருங்கள், உங்களுக்கு என்று ஒரு வாழ்க்கையை உருவாக்கி கொள்ளுங்கள்” என காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

சிக்கித்தவிக்கும் மீரா மிதுன்

மீரா மிதுனின் இந்த பதிவை பார்த்த திரிஷாவின் ரசிகர்கள், அவரை சரமாரியாக திட்டித் தீர்த்து வருகின்றனர். ரசிகர்கள் பேசும் வார்த்தைகளால் டுவிட்டரே அதிர்ந்துபோய்விட்டது. இந்த சம்பவம் நடந்த பிறகு மீண்டும் இதுபோன்று ஒரு பதிவை மீரா மிதுன் பதிவிடமாட்டார் என ரசிகர்கள் நம்புகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் வீட்டிலேயே முடங்கியுள்ள திரிஷா, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஒரு குறும்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here