சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணமடைந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தலைமை காவலர் முத்துராஜை வரும் 17ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தை, மகன் மரணம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் நடத்தி கடை வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு மீறி அதிகநேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தந்தை, மகனான இருவரையும் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. பின்னர் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட இருவரும், அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கைது, சிறை

இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு காவலர் என 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்திய பின், நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, இவ்வழக்கில் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்த காவலர் முத்துராஜ், தூத்துக்குடியில் உள்ள அரசன்குளம் பகுதியில் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். அவர்மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு முத்துராஜ் அழைத்துச் செல்லப்பட்டார். அதன்பின் மாவட்ட முதன்மை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட முத்துராஜை, வரும் 17ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here