சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வனிதா. பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளான இவர், சந்திரலேகா படத்திற்கு பிறகு மாணிக்கம் எனும் படத்தில் நடித்தார். இரு படங்களும் சரியாக ஓடாததால் சினிமாவை விட்டு விலகினார். முதலில் நடிகர் ஆகாஷை திருமணம் செய்த வனிதா, 2007ம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன்பின் ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரை திருமணம் செய்து பின்னர் 2010ல் அவரை விவாகரத்து செய்தார். வனிதாவிற்கு முதல் கணவர் மூலம் இரு குழந்தைகளும், இரண்டாவது கணவர் மூலம் ஒரு குழந்தையும் உள்ளனர். இதனிடையே நடன இயக்குனர் ராபர்ட்டுன் கிசுகிசுக்கப்பட்ட வனிதா, வருகிற 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். அதற்கான திருமண அழைப்பிதழும் தயாராகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here