படுக்கைக்கு சம்மதிப்பதால் மும்பை நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் அதிகம் வருவதாக தெலுங்கு நடிகை தேஜஸ்வி பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

தெலுங்கு நடிகை

தமிழில் ‘நட்பதிகாரம் 79‘ எனும் படத்தில் நடித்தவர் தெலுங்கு நடிகை தேஜஸ்வி மடிவாடா. இவர் தெலுங்கில் மனம், ஹார்ட் அட்டாக், ஸ்ரீமந்துடு, சுப்ரமணியம் பார் சேல் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். 2018ல் தெலுங்கில் மா ஸ்டார் சேனலில் இளம் நடிகர் நானி ஹோஸ்ட் செய்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார்.

சினிமாவை விட்டே விலக நினைத்தேன்

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: “நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பெண்களை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் உலக சினிமாவில் நடக்கின்றன. நானும் அந்த பிரச்சனையை எதிர்கொண்டேன். இதனால் சினிமாவை விட்டே விலக நினைத்தேன். பல நடிகைகள் இதனை வேறு வழியின்றி எதிர்கொள்கின்றனர்.

பகீர் குற்றச்சாட்டு

சினிமா துறையில் 90 சதவீதம் இந்த பிரச்சனை உள்ளது. மும்பை நடிகைகள் பட வாய்ப்புகளை பெறுவதற்காக மனரீதியாக இதற்கு உடன்பட தயாராகி விடுகிறார்கள். இதனால்தான் அவர்களுக்கு பட வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கின்றன. இதனால் புதிதாக ஆர்வமுடன் நடிக்க வரும் பெண்களையும் இதைப்போல் இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள். இதற்கு முரண்பட்டால் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான். தென்னிந்திய நடிகைகள் பிகினி உடை, முத்தக்காட்சி போன்றவற்றில் நடிக்கவே கூச்சப்படுகின்றனர். சினிமா பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது தென்னிந்திய நடிகைகளுக்கு தெரியும். ஆனால் அவர்கள் அதற்கு சம்மதிப்பது இல்லை.

ஒழிக்க வேண்டும்

நான் ஒருவரை காதலித்தேன். திருமணத்துக்கும் தயாரானோம். அதன்பிறகு சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதை அறிந்து என்னையும் அதேபோல் நினைத்து என் காதலை முறித்து என்னை திருமணம் செய்து கொள்ள அந்த நபர் மறுத்துவிட்டார். மற்றொருவர் நம்புவதற்காக வாழ்வது வாழ்க்கை இல்லை. என்மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. படுக்கைக்கு அழைப்பதை சினிமாவில் இருந்து முற்றிலும் ஒழிக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார். தேஜஸ்வியின் இந்தக் குற்றச்சாட்டு பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here