தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்ப சலனம் காரணமாக தேனி, திண்டுக்கல், நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பசலனம்

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பசலனம் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும்.

இடியுடன் கூடிய கனமழை

சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மிதமான மழையும், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். லட்சத்தீவு, மாலத்தீவு, கேரள கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் சூறாவற்றுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here