உலகளவில் மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைத்த ‘அவதார்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிப் படம்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அவதார்’. உலகம் முழுவதும் வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதானை படைத்தது. இதனையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்றன.

படப்பிடிப்பில் பாதிப்பு

ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதனால் அவதார் 2 படத்தின் படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று சில நாடுகளில் சற்று குறைந்ததையடுத்து வழக்கமான பணிகளும், தொழில்களும் நடைபெற ஆரம்பித்துள்ளன.

மீண்டும் படப்பிடிப்பு

அந்த வகையில், ‘அவதார் 2’ படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் நியூசலாந்தில் ஆரம்பமாக உள்ளது. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜான் லான்டாவ் இதுபற்றிய தகவலை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here