தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகமான ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஹிட் திரைப்படம்

கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான தேவர் மகன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. 40வது இந்திய தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் இத்திரைப்படம் பல பிரிவுகளில் 5 விருதுகளை வென்றது. மேலும் இத்திரைப்பட வெற்றியினை அடுத்து இந்தியில் விரசாத் என்ற பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்டது.

அற்புதமான இசை

பரதன் இயக்கிய தேவர் மகன் படத்தில் கமல் ஹாசன், சிவாஜி கணேசன், ரேவதி, கௌதமி, வடிவேலு, நாசர் உட்பட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

‘தலைவன் இருக்கின்றான்’

தேவர் மகன் படத்தை ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற பெயரில் ரீமேக் செய்ய இருப்பதாக கமல்ஹாசன் தெரிவிந்திருந்தார். தற்போது அந்த படத்தை தொடங்க இருக்கிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர். ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் வடிவேலு இப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் ரேவதி

தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேவர் மகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த ரேவதி இப்படத்திலும் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

ஆண்ட்ரியா, பூஜா குமார்

மேலும் ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் ஆகியோரும் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே கமலின் விஸ்வரூபம், உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘தலைவன் இருக்கின்றான்’ படத்திற்கான பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், மற்ற நடிகர்களின் தேர்வும் நடைபெறுவதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here