ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் சூர்யாவின் துணிச்சலான முடிவை நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் பாராட்டி உள்ளார்.

ஓடிடியில் ‘பொன்மகள் வந்தாள்’

சூர்யாவின் 2டி எண்டர்டெயிமென்ட் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. இந்த படத்தை தியேட்டர்களுக்கு பதிலாக நேரடியாக ஓடிடி தளத்தில் சூர்யா வெளியிடுகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள திரையரங்கு உரிமையாளர்கள், சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என எச்சரித்துள்ளனர்.

பார்த்திபன் ஆதரவு

ஆனாலும் எதிர்ப்பை மீறி வருகிற 29-ந் தேதி ‘பொன்மகள் வந்தாள்’ படம் இணையதளத்தில் வெளியாகிறது. இதற்கு வரவேற்பு தெரிவித்து நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நமது முடியை திருத்தலாமா, வேண்டாமா? என்று யோசிக்கிற ஒரு நிலைமை வந்து விட்டது.

திருத்தம்

திருத்தம் என்பது முடியில் மட்டும் இல்லை. சட்ட திருத்தங்கள், தொழில் சார்ந்த வரைமுறை திட்டங்கள் இப்படி நிறைய விஷயங்களில் தேவைப்படுகிறது. ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் வருகிற 29-ந்தேதி இணையதளத்தில் வெளியாகிறது.

சூர்யாவுக்கு பாராட்டு

தைரியம்தான் புருஷ லட்சணம் என்பார்கள். ஒரு தைரிய லட்சுமியின் புருஷன், எத்தனை வைராக்கியத்தோடு அத்துணையின் காதல் கணவராக, கவுரவ காதலராக வைத்த காலை பின்வாங்காத வையக வீரராக ஒழுக்கம், தெளிவு, தைரியமுடன் பொன்மகள் வந்தாள் படத்தை இணையதளத்தில் வெளியிடுகிறார். சூர்யாவுக்கு வாழ்த்துகள் என பார்த்திபன் அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here