சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வெள்ளைப்புலியை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார்.

“விலங்கு தத்தெடுப்பு” திட்டம்

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏராளமான வன விலங்குகள் மற்றும் பறவை இனங்கள் உள்ளன. இப்பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் விலங்குகளை பார்ப்பதோடு மட்டுமின்றி இங்குள்ள விலங்குகளோடு ஒரு சிறந்த பந்தத்தை அமைக்கும் விதமாக “விலங்கு தத்தெடுப்பு” திட்டம் செயல்பட்டு வருகிறது.

புலி தத்தெடுப்பு

இதன்மூலம் மக்கள் தங்களுக்கு பிடித்த விலங்குகளுக்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவை ஏற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் ‘அனு’ என்னும் வெள்ளை புலியை கடந்த 2018ம் ஆண்டு தத்தெடுத்தார். தற்போது அந்த புலியை மேலும் 4 மாதங்களுக்கு அவர் தத்தெடுத்துள்ளார்.

விஜய்சேதுபதியும் தத்தெடுப்பு

இந்த புலி வண்டலூர் பூங்காவில் உள்ள 14 வெள்ளைப்புலிகளில் ஒன்றாகும். இந்த தகவலை வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு வெள்ளைப் புலியை நடிகர் விஜய்சேதுபதியும் தத்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here