கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மே 31ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்து 90,927 ஆக உயர்ந்தள்ளது.

ஊரடங்கு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25ந் தேதி முதல் மே 17ந் தேதி வரை மூன்று கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மே 17க்கு பிறகு சில தளர்வுகளுடன் நான்காம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தெரிவித்தார்.

ஊரடங்கு நீட்டிப்பு

இந்த நிலையில், மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் மே 31 ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு 12 மணியுடன் 3 ஆம் கட்ட ஊரடங்கு முடியும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசு ஏற்கனவே மே 31ந் தேதி வரை ஊரடங்கை நீடித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here