விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க நடிகர் சிம்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வசூலில் சாதனை

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு – திரிஷா கூட்டணியில் உருவான திரைப்படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. 2010-ம் ஆண்டு வெளியான இப்படம், காதலர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூல் சாதனை படைத்தது.

வெற்றிப் படம்

சமீபத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் 10வது ஆண்டு விழாவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து கொண்டாடி வந்தனர். இயக்குநர் கெளதம் மேனன், நடிகை திரிஷா உள்ளிட்டோர் அப்படத்தின் நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர்.

குறும்படம்

இப்படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால், அதன் அடுத்த பாகத்தை எழுதி முடித்துள்ளார் கெளதம் மேனன். அடுத்தடுத்த படங்களில் அவர் பிஸியானதால் அதனை கிடப்பில் போட்டிருந்தார். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு விழிப்புணர்வுக்காக அதிலிருந்து ஒரு பகுதியை, வீட்டிலிருந்தபடியே குறும்படமாக எடுத்துள்ளார் கெளதம் மேனன். சிம்பு மற்றும் திரிஷா செல்போனில் உரையாடுவது போன்று இந்த குறும்படம் அமைந்திருந்தது.

‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’?

இந்த குறும்படத்திற்கான வசனத்தை கெளதம் மேனன் அனுப்பியபோது, அதனை படித்த சிம்பு, இதனை குறும்படத்துடன் நிறுத்திவிடக்கூடாது என தெரிவித்துள்ளார். கண்டிப்பாக விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகம் பண்ணனும் என சொன்ன சிம்பு, அதன் ஷுட்டிங்கிற்காக எப்போது வேண்டுமானாலும் தேதிகளை ஒதுக்க தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தாராம். இதன்முலம் விண்ணைத்தாண்டி வருவாயா-2 குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here