சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் வருகிற மே 29ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பொன்மகள் வந்தாள்’

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கி உள்ள இந்தப் படத்தில், பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் உள்ளிடோர் நடித்துள்ளனர்.

கடும் எதிர்ப்பு

‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. ரூ.4.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தை பிரபல ஓடிடி நிறுவனத்திற்கு பல மடங்கு லாபத்தில் விற்கப்பட்டதாக கூறப்பட்டது. இப்படத்தை ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், இதன் வெளியீட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்றன.

ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்த நிலையில், ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற மே 29-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவன டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓடிடியில் ‘பெண்குயின்’

இதேபோல், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பெண்குயின்’ படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பெண்குயின்’ திரைப்படம் ஒடிடி தளத்திலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஜூன் மாதம் 19-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண் வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here