சமூக வலைதளத்தில் ஆபாசமான கமெண்டுகளை பதிவிடும் ரசிகர்கள் அதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமென இளம் நடிகை ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இளம் நடிகை

தமிழில் வெண்ணிலா வீடு படத்தின் மூலம் அறிமுகமானவர் இளம் நடிகை சிரிண்டா. கேரளாவை சேர்ந்த இவர், 22 பிமேல் கோட்டயம், 101 வெட்டிங்ஸ், தட்டத்தின் மறையத்து, மங்கலீஷ், ஆடு, லோஹம், ராணி பத்மினி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மம்முட்டி, பகத் பாசில், நிவின் பாலி போன்ற முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்து வருகிறார்.

ஆபாச கமெண்ட்

சிரிண்டா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடை அணிந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தாறுமாறான கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அவரது தோற்றம் பற்றி அவதூறான வார்த்தைகளையும் பகிர்ந்ததால், சிரிண்டா ஆத்திரம் அடைந்தார்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், சமூக வலைத்தளத்தில் பெண்களுக்கு பாதுகாப்பும், சுதந்திரமும் இல்லை என்ற பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தனது சமூக வலைத்தள பக்கத்தில் சிலர் ஆபாசமான கருத்துகளை பதிவிடுவதாகவும், இதனை அவர்கள் உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தார். 

எச்சரிக்கை

நான் எந்த மாதிரியான உடைகளை அணிய வேண்டும், என்ன கருத்துகளை பதிவிட வேண்டும் என்று யாரும் எனக்கு சொல்லித்தர தேவை இல்லை எனக் கூறியுள்ள சிரிண்டா, எனது சமூக வலைத்தளத்தில் வந்து உங்கள் வக்கிரங்களை காட்ட வேண்டாம் என்றும் காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here