பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ஒருவர், கொரோனா நிவாரணத்துக்காக டிக்டாக்கில் நடன நிகழ்ச்சி நடத்தி ரூ.5 கோடி நிதி திரட்டி உள்ளார்.

கொரோனா நிதி

கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானமின்றி தவித்து வரும் கூலித் தொழிலாளர்களுக்கு நடிகர் – நடிகைகள் உட்பட பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்தொலாவும் ரூ. 5 கோடி நிதி வழங்கி உள்ளார்.

பிரபல நடிகை

தமிழில் வெளியான ‘திருட்டுப்பயலே-2’ படத்தின் இந்தி ரீமேக்கில் அமலாபால் கதாபாத்திரத்தில் ஊர்வசி ரவ்தொலா நடித்து இருந்தார். ஷனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, காபில் ஹேட்ஸ்டோரி-4, பகல் பந்தி உள்ளிட்ட பல படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

டிக்டாக் வீடியோ

இவர், உடல் எடையை குறைப்பதற்காக இணையதளத்தில் நடன வகுப்புகளை நடத்தினார். ஸூம்பா, லதின், டபாடா போன்ற நடனங்களை ஊர்வசி ரவ்தொலா சொல்லி கொடுக்கும் வீடியோ, டிக்டாக் மூலம் அதிகமானோரை சென்றடைந்தது. இதன்மூலம் அவருக்கு ரூ. 5 கோடி கிடைத்துள்ளது. அந்த தொகையை கொரோனா நிவாரணத்துக்கு அவர் வழங்கி உள்ளார்.

உதவியர்களுக்கு நன்றி

இதுபற்றி பேசிய ஊர்வசி ரவ்தொலா, கொரோனா பாதிப்புகளுக்கு அனைவரும் உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். எவ்வளவு நன்கொடை கொடுத்தாலும் அதை குறைத்து மதிப்பிட கூடாது எனவும் நிவாரணம் வழங்கிய அரசியல்வாதிகள், நடிகர்களை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here