லாக்டவுன் காரணாமாக சினிமா துறை அதிக அளவில் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் நடிகை ராஷ்மிகா தனது சம்பளத்தை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்னலில் திரைத்துறை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மே 17-ந் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திரைத்துறையினர் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலைமை சரியாக இன்னும் பல மாதங்கள் ஆகும் என்பதால், சினிமாவில் முதலீடு செய்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பளத்தை உயர்த்த முடிவு?

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் நடிகை ராஷ்மிகா, தனது சம்பளத்தை உயர்த்த முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ள ராஷ்மிகா, அடுத்து தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா என்ற படத்தில் நடிக்கிறார்.

புது திட்டம்

சம்பளத்தை உயர்த்தலாம் என முடிவெடுத்த ராஷ்மிகாவுக்கு இந்த லாக்டவுன் இடைஞ்சலாக வந்திருக்கிறது. இனி தான் ஒப்புக்கொள்ளும் படங்களில் சம்பளத்தை உயர்த்தி கேட்க அவர் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. புஷ்பா படத்திற்காக ராஷ்மிகா ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் வாங்குகிறார் என்றும், அடுத்த படங்களில் 1.5 கோடி முதல் 2 கோடி வரை அவர் சம்பளத்தை உயர்த்தலாம் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here