விசாகப்பட்டினத்தில் தொழிற்சாலையில் இருந்து விஷவாயு வெளியேறி 8-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து நெஞ்சம் பதறிவிட்டதாக நடிகை தமன்னா கூறியுள்ளார்.

வெளியேறிய விஷவாயு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பிரபல எல்.ஜி பாலிமர் ரசாயன தொழிற்சாலையில் இருந்து விஷவாயு கசிந்து வெளியேறியதில், 5000த்திற்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர். இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூச்சுத்திணறல்

தொழிற்சாலைக்கு அருகே பல குடியிருப்புகள் இருந்ததால், விஷவாயு அருகில் இருந்த கிராமம் வரை பரவி பல ஆயிரக்கணக்கான மக்களின் சுவாசத்தை பாதித்து மூச்சுத்திணறல் ஏற்படுத்தியது. இந்த விஷவாயு விபத்து எப்படி ஏற்பட்டது என்றும் ரசாயன ஆலையில் இருந்து எப்படி இவ்வளவு விஷவாயு பரவியது என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பதறிய தமன்னா

இதுகுறித்த தகவல் அறிந்த நடிகை தமன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காலையில் எழுந்தவுடனே விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவம் நெஞ்சை பதற வைத்து விட்டது. விஷவாயு கசிந்து ஏற்பட்ட விபத்தால் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்றும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டோர், உடல் நிலை குணமாகி மீண்டு வரவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here