தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக நடித்து வரும் பிரபல நடிகை கவர்ச்சியாக நடிக்க ரூ.3 கோடி சம்பளம் கேட்டுள்ளார்.
பூஜா ஹெக்டே
தமிழில் ‘முகமூடி’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு ‘அருவா’ படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க இவரது பெயர் அடிபட்டது. ஆனால் ராஷி கன்னா தேர்வாகி உள்ளார். தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கு, இந்தியில் பிஸி
தெலுங்கில் பூஜா ஹெக்டே நடித்த படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதையடுத்து தனது சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தினார். இந்தியில் சல்மான்கான் ஜோடியாக ‘கபி ஈத் கபி’ என்ற படத்தில் நடிக்கிறார். ஊரடங்கு முடிந்ததும் இதன் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.
ரூ 3 கோடி வேண்டும்
இந்த நிலையில் இன்னொரு இந்தி படத்தில் நடிக்க பூஜா ஹெக்டேவை படக்குழுவினர் அணுகி உள்ளனர். படத்தில் கவர்ச்சி காட்சிகளும், நெருக்கமான படுக்கை அறை காட்சிகளும் உள்ளன என்று அவரிடம் தெரிவித்து கதை சொல்லி உள்ளனர். நெருக்கமான கவர்ச்சி காட்சிகளில் நடிக்க வேண்டுமானால் ரூ.3 கோடி சம்பளம் வேண்டும் என்று பூஜா ஹெக்டே கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை தேர்வு செய்வதா, வேண்டாமா? என்று படக்குழுவினர் யோசித்து வருகின்றனர்.