இன்ஸ்டாகிராம் நேரலையில் விஜய் சேதுபதியுடன் கலந்துரையாடிய நடிகர் கமல்ஹாசன் மருதநாயகம் படம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.

கைவிட்ட கமல்

மருதநாயகம் படவேலைகள் 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டு சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் திடீரென நிறுத்தப்பட்டது. பட்ஜெட் மற்றும் சர்வதேச அளவிலான வினியோக சந்தை நிலவரம் உள்ளிட்ட சில காரணங்களால் படப்பிடிப்பை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டதாக அப்போது கூறப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மருதநாயகம் படத்தை கமல்ஹாசனால் எடுக்க முடியவில்லை.

நடிக்க முடியாது

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதியுடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் கலந்துரையாடிய கமல், மருதநாயகம் படம் குறித்த அவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். மருதநாயகத்தை புத்தகமாக வெளியிட வேண்டும் என்றால் உடனே வெளியிட்டு விடலாம். ஆனால் அதை படமாக எடுக்க பணம் வேண்டும். அந்த பணம் இருந்தால் உடனே உருவாகும். நான் உருவாக்க நினைத்த மருதநாயகம் 40 வயது கதாநாயகனுக்காக எழுதப்பட்டது. இப்போது என்னால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது. ஆகவே வேறு ஒரு நடிகரை அதில் நடிக்க வைக்க வேண்டும், இல்லையெனில் கதையையே மாற்ற வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here