நயன்தாரா நடிப்பில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி உள்ள அன்னபூரணி திரைப்படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியானது. இதை அதிகமானோர் பார்த்தாலும், சில காட்சிகள் மத உணர்வுகளை புண்படுத்தும் படி உள்ளதாக புகார் எழுந்தது. மேலும் சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று வலிறுத்தப்பட்டது. இந்நிலையில் படத்தில் உள்ள சர்ச்சை காட்சிகள் நீக்கும் வரையில், படத்தை OTT தளத்தில் இருந்து நீக்குவதாக, அப்படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான ஜீ ஸ்டுடியோ அறிவித்து, நீக்கியது. இதுதொடர்பாக நடிகை நயன்தாரா தற்போது மன்னிப்பு தெரிவித்துள்ளார். “அன்னபூரணி திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமில்லாமல், ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம் என்றும் மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே அன்னபூரணி திரைப்படத்தை உருவாக்கினோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here