தனக்கு ஆக்ஷன் கதாபாத்திரம் கிடைக்கும் என தான் எதிர்பார்த்ததே இல்லை என்று நடிகை எமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.

துரையம்மாள்

ஏ.எல். விஜய் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன், தற்போது ஹிந்தி, கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். மதராசபட்டினம் வெற்றிக்குப் பிறகு இவர் தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அதிகமாக கிடைத்தது. தாண்டவம், ஐ, தங்க மகன், கெத்து, தெறி, தேவி, எந்திரன் 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

வாய்ப்புகள் குறைவு

பின்னர் வாய்ப்புகள் குறைந்ததன் காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை எமி ஜாக்சன், நீண்ட இடைவெளிக்கு பிறகு அருண் விஜய் நடிக்கும் ‘மிஷன் அத்தியாயம் 1’ படத்தில் நடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு முதல் ஜார்ஜ் என்பவுடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்த நடிகை எமி ஜாக்சனுக்கு ஒரு மகன் உள்ளார். அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்த எமி ஜாக்சன், தற்போது ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவருடன் வாழ்ந்து வருகிறார்.

எதிர்பார்க்கல

‘மிஷன் அத்தியாயம் 1’ படத்தில் லண்டன் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நடிகை எமி ஜாக்சன், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அப்படத்தின் புரோமஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார். இந்த நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் அவர், ‘மதராசபட்டினம்’ திரைப்படம் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமானதை பாக்கியமாக கருதுவதாக தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் கூறுகையில்; “பெரும்பாலான இயக்குநர்கள் என்னை ஒரு அழகான காதல் கதாநாயகியாகத்தான் பார்த்துள்ளனர். அதனால் எனக்கு ஆக்ஷன் கதாபாத்திரம் வழங்கப்படும் என எதிர்பார்த்ததே இல்லை. இருப்பினும் விஜய் ஸ்கிரிப்டை சொன்னதும், எனது போலீஸ் கதாபாத்திரத்தின் முக்கியதுவத்தை உணர்ந்து அதற்காக தயாராகிக் கொண்டேன்” என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here