சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடிகை நயன்தாராவின் நிறுவனமான பெமி 9  வெற்றி விழா நடைபெற்றது. இதில் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நயன்தாரா பேசுகையில்; “மாதவிடாய் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. இன்னும் பெண்கள் சானிட்டரி நாப்கின்கள் பெயரை சொல்வதற்கு கூட தயங்குகின்றனர். இந்த விழிப்புணர்வு நாட்டில் உள்ள அனைத்து பெண்களிடமும் சென்று சேர வேண்டும். பெண்களுக்கு நாப்கின்களுக்கான புரிதல் வந்துவிட்டால், அவர்களை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். ஒவ்வொரு ஆணுக்கு பின்னும் ஒரு பெண் இருப்பார்கள் என்பார்கள். ஆனால் தற்போது வெற்றிகரமாக உள்ள அனைத்து பெண்களின் பின்னாலும், மகிழ்ச்சியாக உள்ள பெண்களின் பின்பும் கண்டிப்பாக ஒரு ஆண் இருக்கிறார்கள்”. இவ்வாறு நயன்தாரா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here