தனக்கே தெரியாமல் தனக்கு திருமணம் ஆனதை நினைத்து சிரித்ததாக நடிகை அஞ்சலி கூறியிருக்கிறார்.

தோல்வி படங்கள்

தமிழில் கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன்பிறகு ஆயுதம் செய்வோம், அங்காடித் தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வந்து கொண்டிருந்தார் அஞ்சலி. சமீப காலமாக இவர் நடித்த படங்கள் ஏதும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. தமிழில் கடைசியாக நாடோடிகள் 2 மற்றும் சைலன்ஸ் படங்களில் நடித்திருந்தார்.

ரீ என்ட்ரி

அதன்பிறகு தமிழ் திரையுலகம் பக்கமே எட்டிப் பார்க்காத அஞ்சலி, ஜான்சி, ஃபால் உள்ளிட்ட வெப் தொடர்களில் நடித்தார். ஆனால் அந்த வெப் தொடர்கள் அனைத்தும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தற்போது தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை அஞ்சலி. அதேபோல் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்திலும் நடித்து வருகிறார்.

சிரித்தேன்

இந்நிலையில், திருமண வதந்தி குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் நடிகை அஞ்சலி. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். என்னைப்பற்றி என்ன எழுத வேண்டும், யாருடன் இணைத்து எழுத வேண்டும் என்று அவர்களே முடிவு செய்து எழுதுகிறார்கள். முதலில் நடிகர் ஜெய்யை காதலித்ததாக செய்தி வந்தது. பின்னர் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனதாக சொல்லப்பட்டது. எனக்கே தெரியாமல் எனக்கு திருமணம் ஆனதை நினைத்து நான் சிரித்தேன்” என்று கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here