தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. மக்கள் கூட்டம் அதிகரித்ததன் காரணமாகவும், அனைவரும் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் தீவித்திடலில் இன்று காலை அவரது உடல் வைக்கப்பட்டது. அங்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர், அரசியல் கட்சியினர் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதனைதொடர்ந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. வழி நெடுகிலும் விஜயகாந்திற்கு பல்லாயிரக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதன்பின் சந்தன பேழையில் வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது. அப்போது தெலங்கானா அளுநர் தமிழிசை செளந்தராஜன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here