அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 14வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜாமீன் மறுப்பு

பண பரிவர்த்தனை மோசடி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி பலமுறை ஜாமீன் கேட்டும் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கவில்லை. உச்சநீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டது.

மீண்டும் நீட்டிப்பு

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதை அடுத்து அவர் காணொளி மூலம் ஆஜர் படுத்தப்பட்டார். இதனை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் ஜனவரி 11ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 14வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here