‘எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நதியா கதாபாத்திரம் குறித்து இயக்குநர் மோகன் ராஜா கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஹிட் படம்

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி’. ஜெயம் ரவி நடிப்பில் உருவான இப்படத்தில் நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அசின், பிரகாஷ்ராஜ், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட்டானது.

நதியா?

இந்நிலையில், ‘எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இரண்டாம் பாகத்திற்கான கதை எழுதிமுடிக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டாம் பாகத்தில் நடிகை நதியா கதாபாத்திரம் இடம்பெறாது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here