33 ஆண்டுகளுக்கு பிறகு அமிதாப் பச்சனுடன் இணைவது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

நடிகர் பட்டாளம்

ஜெய்பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேல் நடிகர் ரஜினிகாந்தின் 170வது திரைப்படத்தை இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், ரஜினிகாந்த் உடன் பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. அந்த வகையில் நடிகர் அமிதாப் பச்சனும் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார். பகத் பாசீல், ராணா, நடிகை மஞ்சு வாரியார் என பல்வேறு முன்னணி நடிகர் – நடிகைகள் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

மகிழ்ச்சியில் துடிப்பு

இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது, ‘தலைவர் 170’ படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் மும்பை சென்றுள்ளார். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “33 ஆண்டுகளுக்கு பிறகு ஞானவேல் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் லைகாவின் ‘தலைவர் 170’ படத்தில் எனது வழிகாட்டியான அமிதாப் பச்சனுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. தன் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது” இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் அந்த பதிவில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here