சாலை விபத்தில் சிக்கி சிறையில் உள்ள பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசனுக்கு இரண்டாவது முறையாக ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

பைக் வீலிங்

கோவையைச் சேர்ந்தவர் பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சாத்திரம் அருகே பைக்கில் சென்றபோது சாகசம் செய்ய முயற்சித்தாக கூறப்படுகிறது. அப்போது அவரது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் வாசனுக்கு கை எலும்பு முறிந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

தள்ளுபடி

டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்த பாலுசெட்டி சாத்திரம் காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்ட்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தனக்கு ஜாமீன் கேட்டு கடந்த வாரம் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி செம்மல் முன்பு விசாரணைக்கு வந்தபோது டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். மீண்டும் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதி செம்மல் மீண்டும் மனுவை தள்ளுபடி செய்ததுடன், விபத்து நடந்த அந்த இருசக்கர வாகனம் வெளிநாட்டு வாகனமா? அல்லது உள்ளூர் வாகனமா? என ஆர்.டி.ஓ அறிக்கை தாக்கல் செய்த பின்பு இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here