ஆன்லைன் நிறுவனம் ஒன்றால் தான் ஏமாற்றப்பட்டது குறித்து நடிகை ஜனனி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

நடிகை

தமிழில் விஷால், ஆர்யா நடிப்பில் வெளியான ‘அவன் இவன்’ படத்தில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ஜனனி. அதன்பின், அசோக் செல்வனுடன் இணைந்து தெகிடி படத்தில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாள படங்களில் நடித்து வரும் அவர், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

ஏமாற்றம்

இந்நிலையில், ஒரு பிரபல ஆன்லைன் நிறுவனம் முறையான சேவையை செய்யாமல் அளக்கழைத்ததாக நடிகை ஜனனி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அழகு சாதனங்களை விற்கும் ஆன்லைன் தலத்தில் வேறு நாட்டிலிருந்து ஒரு பொருளை ஆர்டர் செய்துள்ளார். அனால், பெறப்பட்ட பார்சலில் பழுதடைந்த சில பொருட்கள் இருந்துள்ளது. இதைப் பார்த்த ஜனனி அதிர்ச்சியடைந்து, சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் முறையிட்டுள்ளார். ஆனால் அந்த நிறுவனத்திடம் இருந்து சரியான பதில் இல்லையென அவர் கோவத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here