திருமணத்துக்கு முன்பே தான் கர்ப்பமாக இருந்ததாக நிறைய வதந்திகள் பரவியதாகவும், அதில் உண்மை இல்லை எனவும் நடிகை சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார்.

சிறந்த நடிகை

தமிழில் அசல், வாரணம் ஆயிரம், வெடி, வேட்டை, நடுநிசி நாய்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சமீரா ரெட்டி. முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமான இவர், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்துகொண்ட பின் உடல் எடை கூடியதால் சமீரா ரெட்டிக்கு பட வாய்ப்புகள் குறைந்தன.

அது பொய்

இந்நிலையில் சமீரா ரெட்டி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “சினிமாவில் நான் அதிக படங்களில் நடித்து பிரபலமாக இருந்த நேரத்தில் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்துக்கு முன்பே நான் கர்ப்பமாக இருந்ததாக நிறைய வதந்திகள் பரவின. ஆனால் அதில் உண்மை இல்லை. திருமணத்துக்கு பிறகுதான் எனது மகன் பிறந்தான். குழந்தை பிறந்த பிறகு ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மையால் குண்டாகிவிட்டேன். இதனால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் எனக்கு ஏதோ ஆகிவிட்டது என்று உருவ கேலி செய்தார்கள். அவர்களுக்கு பயந்து நான் வெளியே செல்வதை கூட நிறுத்திவிட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here