ஜார்கண்ட் ஆளுநரும், தமிழக பாஜகவின் முன்னள் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசியுள்ளார்.

ஆன்மீக பயணம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இமயமலைக்கு செல்லாமல் இருந்த நடிகர் ரஜினிகாந்த், ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாவதற்கு ஒரு நாளுக்கு முன்பு இமயமலை புறப்பட்டு சென்றார். அங்குள்ள ஆன்மீக ஸ்தலங்களில் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி, இணையத்தில் வைரலாகின.

திடீர் சந்திப்பு

இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜ் பவனுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது நடிகர் ரஜினிகாந்துடன் சி.பி.ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அருமை நண்பர்

இந்த சந்திப்பு குறித்து ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; “ராஞ்சிக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் தலை சிறந்த நடிகரில் ஒருவரும், மனிதநேயமிக்க சூப்பர் ஸ்டாருமான எனது அருமை நண்பர் ரஜினிகாந்தை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here