விஜய் டிவியின் பிளாக் பஸ்டர் கேம் ஷோவான குக் வித் கோமாளி சீசன் 4ன் இறுதிப் போட்டி நிகழ்ச்சி ஜூலை 30 ஆம் தேதி அன்று
5 மணி நேரம் தொடர்ந்து ஒளிபரப்பாக உள்ளது.

பிளாக் பஸ்டர் ஷோ

ஸ்டார் விஜய்யின் குக் வித் கோமாளி என்ற பிளாக் பஸ்டர் ஷோ, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட நாளிலிருந்தே மக்களின் விருப்பமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. இந்நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இறுதிக்கட்டத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளது. நான்கு ஆண்டுகளாக, குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒரு தனித்துவமான கருத்தாக உள்ளதால் பார்வையாளர்களிடமிருந்து அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.

இறுதிப்போட்டிக்கு தேர்வு

குக் வித் கோமாளி சீசன் 4 தொடக்கத்தில் 10 பிரபல நட்சத்திரங்களுடன் தொடங்கப்பட்டது. அவர்கள், பத்து வேடிக்கையான அன்பான கோமாளிகளுடன் ஜோடியாக இந்த சமையல் போட்டியில் கலந்துகொண்டு வந்தனர். பல கடினமான சுற்றுகளுக்குப் பிறகு ஆறு ஜோடிகள் இறுதிப்போட்டிக்கு அடியெடுத்து வைத்துள்ளது.

டைனமிக் நடுவர்கள்

இந்த நிகழ்ச்சியின் டைனமிக் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தொகுப்பாளர் ரக்ஷன் நிகழ்ச்சியை வெகு சிறப்பாக தொகுத்து வழங்குகிறார்.

ரசிகர்கள் குஷி

வரும் ஞாயிற்றுகிழமை இடம்பெறும் இறுதிப்போட்டியில், ஸ்ரீஸ்டி, மைம் கோபி, ஷிவாங்கி, கிரண், விசித்ரா, ஆண்ட்ரியன் ஆகிய ஆறு போட்டியாளர்கள் தங்கள் கோமாளிகளான புகழ், மோனிஷா, குரேஷி, சுனிதா, ஜி.பி.முத்து, சில்மிஷம் சிவா ஆகியோரின் துணையுடன் போட்டிக்குள் நுழைந்துள்ளனர். இதன்மூலம் கோமாளிகள் கிராண்ட் ஃபைனலில், பார்வையாளர்கள், வேடிக்கையான மற்றும் உற்சாகமான தருணங்களுடன் போட்டியாளர்களிடையே மிகவும் ஆடம்பரமான போட்டியை எதிர்பார்க்கலாம். ஜூலை 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஸ்டார் விஜய்யில் மட்டும் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 4ன் கிராண்ட் ஃபைனலைப் காணத்தவறாதீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here