பழம்பெரும் நடிகை மஞ்சுளாவின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு, அவரது கணவர் விஜயகுமார், மகள்கள் பிரீத்தா, ஸ்ரீதேவி, மருமகன்கள் ஹரி மற்றும் ஸ்ரீதேவியின் கணவர் உட்பட பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதுதொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ஸ்ரீதேவி, உருக்கமான பதிவு ஒன்றையும் பகிர்ந்து இருக்கிறார். அதில் “அம்மாவின் பத்தாவது நினைவு நாள். நம்மை நேசிப்பவர்கள் நம்மை விட்டு விலகுவதில்லை. மரணம் கூட தொட முடியாத விஷயங்கள் இருக்கின்றன. உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன் அம்மா. எங்களுடைய எல்லா மகிழ்ச்சிக்கும் பாசிட்டிவிட்டிக்கும். அது தொடர நீங்கள் காரணமாக இருக்கிறீர்கள். நாங்கள் எப்பொழுதும் உங்களை கொண்டாடுவோம், லவ் யூ அம்மா” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here