தென்னிந்திய படங்களில் நடித்ததால் பாலிவுட் தன்னை கைவிட்டதாக நடிகை ஜெனிலியா தெரிவித்துள்ளார்.

துறுதுறு நடிப்பு

பாலிவுட் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை ஜெனிலியா, ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ள நடிகை ஜெனிலியா, தனது வெளிப்படையான மற்றும் துறுதுறுப்பான நடிப்பால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளார்.

திருமணம்

பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்ட பின், படங்களில் நடிப்பதை ஜெனிலியா நிறுத்திவிட்டார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

காரணமே இதுதான்

இந்நிலையில், நடிகை ஜெனிலியா, தென்னிந்திய சினிமா குறித்து மனம் திறந்துள்ளார். இதுதொடர்பாக கூறியதாவது; நான் தென்னிந்திய படங்களில் நடித்த போது என்னை பாலிவுட் கைவிட்டது. அங்கேயே செல் என்று கூறியது. ஆனால், எனக்கு தென்னிந்திய சினிமாவை மிகவும் பிடிக்கும். எனக்கு நடிப்பின் மீது காதல் வர காரணமே தென்னிந்திய சினிமாதான். தென்னிந்திய படங்களில் மீண்டும் நடிக்க விருப்பம் உள்ளது” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here