திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவு பெற்ற ‘பத்து தல’ திரைப்படம் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

மாபெரும் வெற்றி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான இவர், அதன் பிறகு ஹீரோவாக தொடர்ந்து அடுத்ததடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘பத்து தல’. ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் மப்டி என்ற கன்னட படத்தின் ரீரமக்காக இந்த படம் வெளியானது. இப்படத்தில் கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி ஷங்கர் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஜீ தமிழில் ஒளிபரப்பு

‘பத்து தல’ படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜீ தமிழ் நிறுவனம் கைப்பற்றி இருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் டெலிகாஸ்ட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் முதல் முறையாக ‘பத்து தல’ திரைப்படம் வரும் ஞாயிறு (ஜூலை 23) மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை அறிந்த சிம்பு ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ‘பத்து தல’ படத்தின் டெலிவிஷன் ப்ரீமியத்தை வரும் ஞாயிறுக்கிழமை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here