காதல் அளவற்ற ஒன்று, அதை யாராலும் விவரிக்க முடியாது என்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

அறிமுக நாயகி

கில்லி என்ற கன்னட படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமான நடிகை ரகுல் ப்ரீத் சிங், தடையறத் தாக்க, என்னமோ ஏதோ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வந்த ரகுல் ப்ரீத் சிங், தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் தமிழில் கம்பேக் கொடுத்தார். அவர் நடித்த ஸ்பைடர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சூர்யாவின் என்ஜிகே படத்திலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தெலுங்கு, தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தி படங்களில் நடிப்பதிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது சிவகார்த்திகேயனின் அயலான், கமலின் இந்தியன் 2 திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார்.

விவரிக்க முடியாது

இந்நிலையில் காதல் குறித்த கேள்விக்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங் சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, “காதல் அளவற்ற ஒன்று, அதை உங்களால் விவரிக்க முடியாது. நீங்கள் காதலிக்கும் நபருடன் இருக்கும்போது, நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும். காதல் என்பது ஒருவருக்கொருவர் மதிப்பளிக்கக் கூடிய ஒன்று, இது ஒரு தோழமை, இருவரும் ஒருவருக்கொருவர் உதவி இருவரின் கனவுகளையும் எட்ட வேண்டும்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here