சென்னை உட்பட தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இடி மின்னலுடன் மழை

வடதமிழக பகுதிகளின் மேல், மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

கனமழை

கடந்த சில தினங்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழை குறித்த முன்னறிவிப்புகளை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், பெரம்பலூர், விழுப்புரம், அரியலூர், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கோவை, நீலகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யுமென வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையில் மழை

இதனிடையே சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வடபழனி, ஈக்காட்டுதாங்கல், கோடம்பாக்கம், தி.நகர், வில்லிவாக்கம், கொரட்டூர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதேபோல் புறநகர் பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here