ஊர்வசி, பாலு வர்கீஸ், கலையரசன், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சார்லஸ் எண்டர்பிரைசஸ்’. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர். அதில் நடிகை ஊர்வசி பேசுகையில்; “என்னை கண்டெடுத்தது தமிழ் சினிமா. என் உயிர் மூச்சு தமிழ் சினிமா. நான் நேசிக்கிற முதல் மொழி தமிழ். தமிழுடைய சகோதரி தான் எனது தாய்மொழியான மலையாளம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் படித்தவர்களுக்கு இருக்காது. தமிழ் என்ற செம்மொழியில் இருந்து வந்த பல மொழிகளில் ஒன்று மலையாளம். இன்றைக்கும் சுத்தமான தமிழ் வார்த்தை மலையாளத்தில் தான் வாழ்ந்துட்டு இருக்கு. உதாரணமாக காண்பது, உண்பது, கிடப்பது என்ற வார்த்தைகளைச் சொல்லலாம். இதெல்லாம் மலையாளத்தில் பேசப்படுவதால் ஒரு மலையாளியாக நான் சந்தோஷப்படுறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here