பெண்களை மதிக்கத்தெரிந்த ஒருவரைத்தான் திருமணம் செய்வேன் என நடிகை அஞ்சலி மனம் திறந்து பேசியுள்ளார்.

தோல்வி படங்கள்

தமிழில் கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன்பிறகு ஆயுதம் செய்வோம், அங்காடித் தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வந்து கொண்டிருந்தார் அஞ்சலி. சமீப காலமாக இவர் நடித்த படங்கள் ஏதும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. தமிழில் கடைசியாக நாடோடிகள் 2 மற்றும் சைலன்ஸ் படங்களில் நடித்திருந்தார். அதன்பிறகு தமிழ் திரையுலகம் பக்கமே எட்டிப் பார்க்காத அஞ்சலி, ஜான்சி, ஃபால் உள்ளிட்ட வெப் தொடர்களில் நடித்தார். ஆனால் அந்த வெப் தொடர்கள் அனைத்தும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

மதிக்க தெரியனும்

இந்நிலையில், நடிகை அஞ்சலி தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது; “பெண்களை மதிக்கத்தெரிந்த ஒருவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன். அவர் திருமணம் முடிந்த பிறகும் என்னை மரியாதையாக நடத்தும் நபராக இருக்க வேண்டும். இதற்குப் பிறகுதான் அன்பு, காதல் எல்லாமும். அப்படி ஒரு பையன் கிடைக்கட்டும்” என்று கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here