நடிகை நவ்யா நாயர் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சில தமிழ் படங்கள்

அழகிய தீயே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை நவ்யா நாயர், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, அமிர்தம், சில நேரங்களில், ரசிக்கும் சீமானே உள்ளிட்ட சில படங்களில் தமிழில் நடித்துள்ளார். மலையாளத்தில் அதிக படங்கள் நடித்துள்ள இவர், 2010 ஆம் ஆண்டு சந்தோஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு பிரேக் கொடுத்து வந்த நவ்யா நாயர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சினிமாவில் தனது மறு பிரவேசம் சிறப்பாக உள்ளதாக தெரிவித்து நவ்யா நாயர், ரசிகர்கள் அளிக்கும் வரவேற்பு, தான் எதிர்பார்த்ததற்கும் மேலாக இருக்கிறது என்றார். பல கதைகள் கேட்டு, அவற்றில் சில கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

ஃபுட் பாய்சன்

தற்போது நவ்யா நாயர் நடித்துள்ள “ஜானகி ஜானே” திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நவ்யா நாயருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதாவது ப்ரோமோஷன் வேலைகளுக்காக பல இடங்களுக்கு இவர் சென்ற போது ஏதோ உணவு இவருக்கு ஒத்து வராமல் ஃபுட் பாய்சன் ஆகியுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நவ்யா நாயர் மருத்துவமனையில் படுத்து இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. விரைவில் அவர் பூரண குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் நவ்யா நாயரின் உடல்நிலை குறித்து தகவல் தெரிந்த ரசிகர்கள் அவர் உடல்நலம் பெற தங்களின் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here