இதுவரை ஐஸ்வர்யா ராய் நடித்ததிலேயே பொன்னியின் செல்வன் 2 படம் தான் மிக சிறந்த படம் என்று அபிஷேக் பச்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மாபெரும் வெற்றி

உலக அழகி பட்டம் வென்ற பிறகு “இருவர்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய். இருவர் படத்திற்கு பிறகு பாலிவுட்டில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் ஐஸ்வர்யா ராய். தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்கும் ஐஸ்வர்யா, சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்தார். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவானது. முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனையும் படைத்தது. முதல் பாகத்தின் அமோக வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. ஆனால் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் பல சொதப்பல்கள் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

சிறந்த ஜோடி

கடந்த 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா ராய் இன்றும் முன்னணி நடிகையாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். அடிக்கடி இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாகவும், பொது இடங்களில் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயை அவமானப்படுத்துவதாகவும் தகவல்கள் வெளிவந்தாலும், அவை அனைத்தையும் தவிடு பொடியாக்கி இன்றும் சிறந்த நட்சத்திர ஜோடியாக இருக்கின்றனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் குறித்தும், தனது மனைவி ஐஸ்வர்யா குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் நடிகர் அபிஷேக் பச்சன்.

சிறந்த நடிப்பு

நடிகர் அபிஷேக் பச்சன் துபாயில் நடைபெறும் IIFA விருது நிகழ்ச்சியை விக்கி கவுசலுடன் தொகுத்து வழங்குகிறார். அப்போது பேசிய அவர், “ஒரு நடிகராக ஐஸ்வர்யா ராய் இதுநாள் வரை நடித்த படங்களில் சிறந்த படம் ‘பொன்னியின் செல்வன் 2’ என அவரிடமே நான் கூறிவிட்டேன். இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தை கையாள்வது நம்பமுடியாத சாதனை தான். பொன்னியின் செல்வன் 2 படத்தில் ஐஸ்வர்யா அற்புதமாக நடித்திருந்தார். அவரைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன்” என தெரிவித்திருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here