படங்களை தேர்வு செய்தவதில் எப்போதும் கவனமாக இருப்பேன் என நடிகை துஷாரா விஜயன் கூறியுள்ளார்.

துஷாரா விஜயன்

‘சார்பட்டா பரம்பரை’ மற்றும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். நடிகர் அருள்நிதிக்கு ஜோடியாக ‘கழுவேத்தி மூர்க்கன்’ என்ற படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த திரைப்படம் மே 26 திரையரங்குகளில் வெளியானது.

கவனமாக இருப்பேன்

‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து நடிகை துஷாரா பகிர்ந்துள்ளார். நடிகை துஷாரா விஜயன் கூறும்போது, “எனது படங்கள் தேர்வு குறித்து எப்போதுமே நான் கவனமாக இருப்பேன். அதில் என்னுடைய கதாபாத்திரம் எளிதில் என்னுடன் கனெக்ட் ஆக வேண்டும். ‘கழுவேத்தி மூர்க்கன்’ கவிதா என் மனதிற்கு நெருக்கமாக நான் உணர்ந்த அப்படிப்பட்ட ஒரு பாத்திரம். திண்டுக்கலில் உள்ள ஒரு வழக்கமான கிராமத்து பெண். நான் அதே பின்னணியில் இருந்து வந்ததால், இந்த கேரக்டரை செய்வது எளிதாக இருந்தது. அவள் அப்பாவித்தனம் கொண்ட ஒரு பெண். இந்தத் திரைப்படத்திற்குப் பிறகும் பார்வையாளர்கள் அவளை நினைவில் வைத்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

சிறந்த அனுபவம்

நடிகர் அருள்நிதியுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், “அருள்நிதி ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகர். பொதுவாக, அவரது படங்களில் காதல் காட்சிகள் பெரிதாக இருக்காது. ஆனால், இந்தப் படத்தில் எனக்கும் அருள்நிதி சாருக்கும் இடையிலான சில அழகான காட்சிகளை இயக்குநர் கௌதம ராஜ் சார் கொடுத்துள்ளார்” என்று கூறியுள்ளார். ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஷ்காந்த், சரத்லோகித் சாவா, ராஜ சிம்மன், யார் கண்ணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here