சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி சீரியல் 500 எபிசோடுகளை கடந்துள்ளதை சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

முன்னணி நடிகர்கள்

பல தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும், சன் டிவி சீரியல்களுகென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதனாலேயே சன் டிவியில் காலை முதல் இரவு வரை பல சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் “அருவி” தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஜோவிதா லிவிங்ஸ்டன் மற்றும் கார்த்திக் வாசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பிரபல நடிகை அம்பிகா முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் ஷீலா, சாந்தி வில்லியம்ஸ், மீனா செல்லமுத்து, சுமங்கலி மற்றும் ஸ்ரீவித்யா சங்கர் உள்ளிட்ட பலரும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

500 எபிசோட்

டாப் 5 டிஆர்பியில் இருந்து வரும் ‘அருவி’ தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த தொடர் டிஆர்பி யில் முன்னணியில் இருப்பது மட்டும் இல்லாமல் தற்போது 500வது எபிசோடை நிறைவு செய்துள்ளது. 500 எபிசோடுகளை நிறைவு பெற்றுள்ளதால், சீரியல் குழுவினர் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குழுவினருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here