கம்பம் நகருக்குள் அரிசிக்கொம்பன் யானை புகுந்துள்ளதால் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குடியிருப்புகள் நாசம்

கேரள மாநிலத்தில் 7 பேரை கொன்று அட்டகாசம் செய்து வந்த அரிக்கொம்பம் யானையை, கடந்த மாதம் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். பின்பு தமிழக – கேரள எல்லை பகுதியில் உள்ள பெரியாறு புலிகள் சரணாலயத்தில் அந்த யனையை வனத்துறையினர் விட்டனர். ஆனால் அந்த யானை தேனி மாவட்டம் மேகமலை எஸ்டேட் பகுதிக்கு சென்று, அங்கு உள்ள தொழிளாளர்கள் மற்றும் அவர்களின் குடியிருப்புகளை நாசம் செய்தது.

வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு

இந்நிலையில், அரிசிக்கொம்பன் யானை கூடலூரில் லோயர் கேம்ப் பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளை நாசம் செய்ததாக பொதுமக்கள் வனத்துறை மற்றும் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற தமிழக, கேரள போலீசார் மற்றும் வனத்துறையினர் பெறும் முயற்சிக்கு பின் அரிசிக்கொம்பன் யானையை வனப்பகுதிக்கு விரட்டினர்.

அரிசிக்கொம்பனின் அட்டகாசம்

இந்நிலையில், மீண்டும் வனப்பகுதியை விட்டு வெளியேறிய அரிசிக்கொம்பன் யானை தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்கு வந்து அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டாகசம் செய்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளனர். வனத்துறையினர் யானையை பின் தொடர்ந்து பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த மாதம் பிடிக்கப்பட்டு பெரியார் புலிகள் காப்பகத்தில் விடப்பட்ட அரிசிக்கொம்பன் யானை, தற்போது மீண்டும் கம்பத்திற்கு வந்துள்ளது.

தடை உத்தரவு

இதுவரை 18 பேரை கொன்று அட்டகாசம் செய்துவரும் அரிக்கொம்பன் யானை, மீண்டும் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, தற்போது கம்பம் நகரில் அரிசிக்கொம்பன் நுழைந்த நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கம்பத்தில் அரிசிக்கொம்பன் யானை நடமாடும் நிலையில், மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தடுக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரிசிக்கொம்பன் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். அரிசிக்கொம்பன் நடமாட்டத்தால் கம்பத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here