சினிமாவிற்கு வந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நடிகை அஞ்சலி தனது 50வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தோல்வி படங்கள்

தமிழில் கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன்பிறகு ஆயுதம் செய்வோம், அங்காடித் தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கே எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வந்து கொண்டிருந்தார் அஞ்சலி. சமீப காலமாக இவர் நடித்த படங்கள் ஏதும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. தமிழில் கடைசியாக நாடோடிகள் 2 மற்றும் சைலன்ஸ் படங்களில் நடித்திருந்தார். அதன்பிறகு தமிழ் திரையுலகம் பக்கமே எட்டிப் பார்க்காத அஞ்சலி, ஜான்சி, ஃபால் உள்ளிட்ட வெப் தொடர்களில் நடித்தார். ஆனால் அந்த வெப் தொடர்கள் அனைத்தும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

ரீ என்ட்ரி

தற்போது தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை அஞ்சலி. இந்த படத்தை இயக்குநர் சங்கர் இயக்குகிறார். சினிமாவில் என்ட்ரி கொடுத்து 17ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது அஞ்சலி தனது 50வது படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.இந்தப் படத்தை கிரீன் அமியூஸ்மெண்ட் மற்றும் டி3 புரொடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. மேலும் இப்படத்திற்கு “ஈகை” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் மூலம் அஞ்சலி தமிழில் ரீ என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here