ஏ.ஆர். ஜெயகிருஷ்ணா இயக்கத்தில் உருவாக்கி வரும் புதிய படத்தில் வில்லியாக நடித்து வருகிறார் நடிகை சோனியா அகர்வால்.

வில்லியான சோனியா

முன்னணி நடிகர்களாக இருக்கும் பலர் தனக்கேற்ற கதாபாத்திரம் கிடைத்தால் குணச்சித்திர கதாபாத்திரத்திலும், வில்லனாகவும் நடித்து வருகின்றனர். அதேபோல் நடிகைகளும் நெகட்டிவ் ரோல்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகை சோனியா அகர்வால் தற்போது வில்லியாக நடித்து வருகிறார். காதல் கொண்டேன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான சோனியா அகர்வால், தற்போது ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா இயக்கத்தில் உருவாக்கி வரும் “உன்னால் என்னால்” என்ற படத்தில் வில்லியாக நடிக்கிறார்.

ரியல் எஸ்டேட் மோசடி

ரியல் எஸ்டேட் மோசடிகளை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி வருகின்றது. இதில் பொது மக்களை ஏமாற்றி மோசடி செய்யும் கும்பலின் தலைவியாக சோனியா அகர்வால் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் ஜெகா, கே.ஆர். ஜெய கிருஷ்ணா, உமேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், மோனிகா உள்ளிட்ட பலரும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதற்கு முன் முன்னணி நடிகைகளான ஜோதிகா, ரம்யா கிருஷ்ணன், ரீமா சென், திரிஷா, சிம்ரன் உள்ளிட்ட பலரும் நெகட்டிவ் ரோலில் நடித்து புகழ்பெற்றனர். அந்த வரிசையில் தற்போது நடிகை சோனியா அகர்வாலும் இணைந்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here