நடிகர் சித்தார்த்துடன் காதல் கிசுகிசுக்களில் அடிக்கடி சிக்கிக் கொள்ளும் அதிதி ராவ்விடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அதிதி வெட்கப்பட்டு சென்றுள்ளார்.

இருவரும் விவாகரத்தானவர்கள்

நடிகை அதிதி ராவ், 2009 ம் ஆண்டு நடிகர் சத்யதீப் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால்,கருத்துவேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்தார் அதிதி. பாய்ஸ் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் சித்தார்த், ஆயுத எழுத்து, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் nh4 போன்ற பல படங்களில் நடித்தார். காவியத் தலைவன், எனக்குள் ஒருவன் போன்ற திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளிலும் நடித்து வரும் நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவை காதலிப்பதாக தகவல்கள் கசிந்தது. அதேபோல் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்களும் வேகமாக பரவி வர, இந்த காதல் விவகாரம் உண்மை தான் என்று ரசிகர்களிடையே பேச்சுக்கள் நிலவ தொடங்கியது. எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே சென்று புகைப்படங்களை வெளியிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

குழம்பிய ரசிகர்கள்

சமீபத்தில் கூட அதிதியிடம் காதல் விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அந்த சமயத்தில்,” பேசுபவர்கள் பேசட்டும் அதுக்கு எல்லாம் நான் விளக்கம் கொடுக்க முடியாது” என்று அதிரடியாக கூறியிருந்தார் அதிதி ராவ். ஆனால் சமீபத்தில் மீண்டும் அவரிடத்தில் இதை பற்றி கேட்கப்பட்டது, அப்போது தனது முகத்தை மூடிக்கொண்டு வெட்கப்பட்டு சென்று விட்டதால் இந்த ரியாக்ஷனுக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல் அனைவரும் குழம்பி வருகின்றனர். ஆனால் இதுவரை இருவரும் இது குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here